ஈரான் சிறையில் உள்ள பிரான்ஸ் ஜோடியை விடுவிக்க ஜனாதிபதி மேக்ரான் வலியுறுத்தல்
#Arrest
#France
#President
#Iran
#release
#couple
Prasu
3 hours ago

மூன்றாண்டுகளாக ஈரானில் சிறையில் வாடும் பிரெஞ்சு ஜோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் கடுமையாக வலியுறுத்தியுள்ளார்.
2022 மே மாதம் ஈரான் பயணத்தில் இருந்த போது கைது செய்யப்பட்ட செசில் கோலர் மற்றும் ஜாக் பாரிஸ் ஆகியோருக்கு ஈரான் அரசு உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு சுமத்தியுள்ளது.
X தளத்தில் வெளியிட்ட பதிவில், மேக்ரான், ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் உடன் உரையாடியதைக் குறிப்பிடுகிறார்.
இதில் அவர், "அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அநியாயமானவை. அவர்கள் பிரான்ஸுக்கு உடனடியாக திருப்பி அனுப்பப்பட வேண்டும்" என வலியுறுத்தினார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



