பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் முறைப்பாடு அளிக்க தொலைபேசி இலக்கம் அறிமுகம்!
#SriLanka
#Abuse
#Sexual Abuse
#School Student
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
6 months ago
பாடசாலைகளில் இடம்பெறும் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் முறையிடுவதற்கு 1929 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த அவசர தொலைபேசி இலக்கம் 24 மணிநேரமும் சேவையில் இருக்கும் எனவும் மாணவர்கள் பாலியல் அத்துமீறல்கள் தொடர்பில் முறைப்பாடு அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் பாடசாலைகளில் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் ncpa@childprotection.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாகவும் முறைப்பாடு அளிக்க முடியும்.
அத்துடன் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அலுவலகத்திற்கு சென்றும் முறைப்பாடுகளை அளிக்க முடியும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
