இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ள ரணில் விக்கிரமசிங்க!

#SriLanka #Ranil wickremesinghe #ADDA #ADDAADS #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Dhushanthini K
2 days ago
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ள ரணில் விக்கிரமசிங்க!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (28) இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார். 

 முன்னாள் ஜனாதிபதி இன்று காலை 9.30 மணிக்கு ஆணைக்குழுவில் ஆஜராக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

 ஊவா மாகாண முதலமைச்சராக இருந்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக வாக்குமூலம் அளிக்க, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை அழைத்துள்ளார். 

 சம்பந்தப்பட்ட சம்பவம் தொடர்பாக ஏப்ரல் 17 ஆம் திகதி இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவிக்கப்பட்டிருந்தாலும், அன்றைய தினம் அவர் ஆஜராக முடியாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து அவர் இன்று ஆஜராக உள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!