பேருந்து சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் : இறுதி தீர்மானம் இன்று அறிவிப்பு!
#SriLanka
#Protest
Thamilini
10 months ago
பொலிஸாரினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பஸ் சோதனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆரம்பிக்கப்படவுள்ள பஸ் பணிப்புறக்கணிப்பு தொடர்பில் இன்று (08.01) இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இன்று காலை பதில் பொலிஸ் மா அதிபருடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், இன்று நண்பகல் 12 மணிக்குள் தனது முடிவை அறிவிப்பதாக கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.