சிவப்பு அரிசி தட்டுப்பாடு மற்றும் விலை தொடர்பில் ஹர்ஷ டி சில்வா கேள்வி?
#SriLanka
Dhushanthini K
5 months ago

SJB பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, சிவப்பு அரிசி தட்டுப்பாடு மற்றும் கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக சிவப்பு அரிசி விற்பனை செய்வது குறித்து அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பினார்.
சிவப்பு அரிசி கிலோ ரூ. அம்பலாந்தோட்டையில் 265 ரூபாவாகவும் ஒரு சில பிரதேசங்களில் 220 ரூபாவாகவும் எவ்வாறு விற்பனை செய்யப்படுகிறது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
"தென் மாகாணத்தில் நாங்கள் சிவப்பு அரிசியை உண்கிறோம். அரசாங்கத்திற்கு மூன்று மாதங்கள் இருந்தபோதிலும் சிவப்பு அரிசியை இறக்குமதி செய்ய கூட அரசாங்கம் தவறிவிட்டது" என்று அவர் கூறினார்.



