களவாடப்பட்ட சொத்துக்களை திரும்பப்பெற புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை!
#SriLanka
#Parliament
#Law
Dhushanthini K
8 months ago

நாட்டில் இருந்து களவாடப்பட்ட சொத்துக்களை மீட்பதற்காக புதிதாக 03 சட்டங்களை அறிமுகப்படுத்துவது தொடர்பில் நீதியமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (04.12) இடம்பெற்ற அமர்வில் கலந்துகொண்ட நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அடுத்த காலாண்டில் இந்த சட்டமூலங்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனக் கூறினார்.
குற்றச் சட்டமூலம், மீட்பு, புனர்வாழ்வு மற்றும் திவால் சட்டமூலம், கணக்காய்வு சட்டமூலம் ஆகியவற்றுக்கான திருத்தங்கள் இவ்வாறு சமர்ப்பிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.



