2024 பொதுத் தேர்தலில் கொண்டுவரப்படவுள்ள மாற்றம்!
#SriLanka
Thamilini
1 year ago
2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பில் இடது கையின் ஆள்காட்டி விரலில் கலர் அடிக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் திரு சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (11) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை விளக்கினார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், "கடந்த ஜனாதிபதி தேர்தலில் இடது கை மோதிர விரலுக்கு கலர் அடித்தோம். பலருக்கும் இப்படித்தான் குறி வைத்துள்ளனர். அதனால், இம்முறை இடது கையின் ஆள்காட்டி விரலை குறி வைக்க தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது."