பன்றிப் பண்ணையாளர்களிடம் விடுக்கப்பட்டுள்ள முக்கிய வேண்டுகோள்!
#SriLanka
Dhushanthini K
9 months ago

நாட்டில் உள்ள அனைத்து பன்றிப் பண்ணைகளும் அருகில் உள்ள கால்நடை அலுவலகத்திற்குச் சென்று தகவல்களை வழங்குமாறு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் கேட்டுக் கொள்கிறது.
அந்நாட்டின் பன்றிப் பண்ணைகளில் உள்ள பன்றிகளுக்கு முதல்முறையாக ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இந்த பன்றிக்காய்ச்சல் நிலை முதலில் மேல் மாகாணத்தில் பதிவாகியதாகவும், தற்போது ஊவா, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் இது பதிவாகியுள்ளதாக மேல்மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் கே. கே. சரத் கூறினார்.



