அரச வைத்தியசாலைகளில் முக்கிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு!

#SriLanka #Hospital #Medical
Mayoorikka
11 months ago
அரச வைத்தியசாலைகளில் முக்கிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு!

அரச வைத்தியசாலைகளில் உள்ள 850 அத்தியாவசிய மருந்துகளில் 329 மருந்துகள் மூன்று மாதங்களுக்கு கூட போதுமானதாக இல்லை என மருத்துவ வழங்கல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 850 வகையான அத்தியாவசிய மருந்துகளில், 643 மயக்க இதய நோய்கள், குழந்தை நோய்கள் மற்றும் மன நோய்களுக்கு வழங்கப்படும் மருந்துகள் மற்றும் அந்த மருந்துகளும் பற்றாக்குறையாக உள்ளன.

 மருத்துவ வழங்கல் துறையின் சுகாதார தரவு அமைப்பின்படி, 88 வகையான மருந்துகள் எந்த மருத்துவமனையிலும் இல்லை என தெரிவிக்கப்படுகின்றன.

 புற்றுநோயாளிகளுக்கு வழங்கப்படும் 97 வகையான தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளில் 50 வீதமானவை இல்லை என புற்றுநோய் வைத்தியர்கள் சுகாதார அமைச்சுக்கு தெரிவித்துள்ளனர்.

 விநியோகஸ்தர்களுக்கு நிலுவைத் தொகையை வழங்காததால் இவ்வாறு மருந்து தட்டுப்பாடு மீள உருவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு கூறுகிறது. மருத்துவ விநியோகத் துறை மற்றும் அரச மருந்து ஒழுங்குமுறைக் கூட்டுத்தாபனத்தில் இருந்து விநியோகஸ்தர்களுக்கு செலுத்த வேண்டிய தொகை 8000 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாகும்.

 குறித்த மருந்து தட்டுப்பாடு தொடர்பில் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்ற போதும் உரிய தீர்மானம் எட்டப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!