யுத்த குற்றச்சாட்டுகள் மிகைப்படுத்தப்பட்டவை! சரத் பொன்சேகா
#SriLanka
#Sarath Fonseka
#War
Mayoorikka
1 year ago

முன்னாள் இராணுவதளபதியும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத்பொன்சேகா யுத்தகுற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளார்.
விடுதலைப்புலிகளுடனான யுத்தத்தின்போது யுத்தகுற்றங்கள் இழைக்கப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை மிகைப்படுத்தப்பட்டவை என சரத்பொன்சேகா நிராகரித்துள்ளார்.
40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்றால் அவர்களின் மனித எச்சங்கள் எலும்புக்கூடுகள் எங்கே என சரத்பொன்சேகா கேள்வி எழுப்பியுள்ளார்.
எனினும் யுத்தத்தின் பின்னர் சில சம்பவங்கள் இடம்பெற்றதை நிராகரிக்காத அவர் ஒருசம்பவம் குறித்து நான் விசாரணையை ஆரம்பித்தேன் எனினும் பதவியிலிருந்து நீக்கப்பட்டேன் விசாரணையை தொடரமுடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.



