பல துறைகள் தொடர்பில் இலங்கைக்கும் ருமேனியாவுக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்து!
#SriLanka
Mayoorikka
1 year ago
கல்வி, விஞ்ஞானம், கலாசாரம், ஊடகம், இளைஞர்கள் மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளில் இலங்கைக்கும் ருமேனியாவுக்கும் இடையிலான ஒத்துழைப்புத் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி, கல்வி, அறிவியல், கலாச்சாரம், வெகுஜன ஊடகம், இளைஞர்கள் மற்றும் விளையாட்டுத் துறைகளில் முதல் ஒத்துழைப்புத் திட்டத்திற்கான கட்சிகளின் உடன்பாட்டை அரசாங்கம் வெளிப்படுத்தியுள்ளது.
இதேவேளை வெளிவிவகார அமைச்சரின் ருமேனியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, ஒத்துழைப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதுடன், அமைச்சரவையும் அதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.