5 ஆயிரம் செலுத்தினால் மட்டுமே பரீட்சை பெறுபேற்று பத்திரம்! மாணவனிடம் டீல்
#SriLanka
#Kilinochchi
#School Student
Mayoorikka
1 year ago

பரீட்சை பெறுபேற்று பத்திரத்தினை பெற பாடசாலைக்கு சென்ற மாணவனிடம் பணம் தந்தால் மாத்திரமே பெறுபேற்று பத்திரம் தரப்படும் என மிரட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதுதொடர்பில் தெரியவருவதாவது, கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தை சேர்ந்த பழைய மாணவன் தனது க.பொ.த உயர்தர பரிட்சை பெறுபேற்றுப் பத்திரத்தை கல்லூரியில் பெறச்சென்றுள்ளார்.
இந் நிலையில் குறித்த பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் ஆயுட்காலச் சந்தாவாக ரூபா 5,000 செலுத்தி உறுப்பினராகினால் மட்டுமே பரிட்சை பெறுபேற்றுப் பத்திரத்தை வழங்க முடியுமென பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது



