இந்தோனேசியாவில் தங்க சுரங்கத்தில் நிலச்சரிவு : பலர் மாயம்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
இந்தோனேசியாவில் தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 19 பேர் காணாமல் போயுள்ளனர்.
கடும் மழை காரணமாக நாட்டின் சுலவேசி தீவுகள் பகுதியில் அமைந்துள்ள தங்கச் சுரங்கத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சட்டவிரோத அகழ்வில் ஈடுபட்டிருந்த 35 பேர் மண்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த 11 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், காணாமல் போன 19 பேரை கண்டுபிடிக்க மீட்பு குழுக்கள் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.