வைத்தியர் அர்ச்சுனா குறித்து மனித உரிமைகள் ஆணைக்கு குழுவின் தகவல்
#SriLanka
#Jaffna
#Arrest
#doctor
#Human Rights
#Chavakachcheri
Prasu
1 year ago

சாவகச்சேரி வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா கைது செய்யப்படவில்லை என பொலிசார் உறுதி அளித்துள்ளனர்.
மேலும் கைதுகள் இடம்பெறாது எனவும், நிர்வாகம் சார் பிரச்சினை தொடர்பில் நீதிமன்றமே தலையிடும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
விரைவில் சாவகச்சேரி வைத்தியசாலையில் வைத்திய சேவைகள் ஆரம்பமாகும் எனவும் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது.
மேலும் வைத்தியரை கைது செய்ய எதிர்ப்பு தெரிவிக்க வந்த மக்கள் பல நாள் வைத்தியசாலையில் ஒழுங்கான உணவின்றி தங்கியிருக்கும் வைத்தியருக்கு பொதுமக்கள் இணைந்து உரிய உணவை ஒழுங்கு செய்து கொடுத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து பொலிசாரால் வைத்தியர் அர்ச்சுனா அவர்களை விசாரணைக்கு வரும்படி அறிவுறுத்தி அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.



