ரஃபாவில் கொடூரமாக தாக்குதல் நடத்திய இஸ்ரேல் : 25 பேர் உயிரிழப்பு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

காசாவின் தெற்கு நகரமான ரஃபாவிற்கு வெளியே இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்களுக்கான கூடார முகாம்கள் மீது இஸ்ரேலியப் படைகள் ஷெல் தாக்குதல்கள் நடத்தியுள்ளன.
இந்த தாக்குதலில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டதுடன், 50 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்த சண்டையில் நூறாயிரக்கணக்கானோர் வெளியேறிய காசா பகுதியில் நடந்த சமீபத்திய கொடிய தாக்குதல் இதுவாகும்.
தெற்கு காசாவில் இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்களுக்கான முகாமில் இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சி தாக்குதல் சர்வதேச சீற்றத்தை ஈர்த்துள்ளது.



