சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்கும் அரசாங்க நிறைவேற்று அதிகாரிகளின் கூட்டுக் குழு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்கும் அரசாங்க நிறைவேற்று அதிகாரிகளின் கூட்டுக் குழு!

அரசாங்க நிறைவேற்று அதிகாரிகளின் கூட்டுக் குழு சுகயீன விடுமுறை போராட்டத்தை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. 

குறித்த போராட்டமானது நாளை (02.05) மற்றும் நாளை மறுதினம் (03.05)  முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட தொழில்சார் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படாமைக்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. 

அரசாங்கத்தின் மாநிலம் தழுவிய சேவைகள் மற்றும் இணையான திணைக்கள சேவைகளை சேர்ந்த சுமார் 18,000 நிறைவேற்று அதிகாரிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறித்த குழு தெரிவித்துள்ளது. 

அரசாங்கத்தின் நிறைவேற்று அதிகாரிகள் ஏற்கனவே அனைத்து மாவட்ட மற்றும் பிராந்திய ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளில் இருந்து விலகியுள்ளதாகவும், அரசியல்வாதிகள் அழைப்பு விடுத்த கூட்டங்களை புறக்கணித்துள்ளதாகவும் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!