பாதாள உலக குழுக்களின் செயற்பாடுகளை ஒழிக்க களமிறக்கப்பட்டுள்ள விசேட பொலிஸ் குழுக்கள்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
தென் மாகாணத்தில் பாதாள உலக செயற்பாடுகள் மற்றும் குற்றச்செயல்களை தடுப்பதற்கு விசேட பயிற்சி பெற்ற 30 பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
மிரிஸ்ஸ பிரதேசத்தில் ஸ்தாபிக்கப்பட்ட மாத்தறை குற்றப் பிரிவின் செயற்பாடுகளை போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றச்செயல்கள் இடம்பெறும் போது உடனடியாக செயற்படுத்தும் வகையில் இந்த குழு தயார்படுத்தப்பட்டுள்ளது.
உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் மேற்பார்வையில் இந்த விசேட பொலிஸ் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன், உத்தியோகபூர்வ பொலிஸ் நாய்ப் பிரிவொன்றும், விசேட பயிற்சி பெற்ற தாக்குதல் பொலிஸ் பிரிவொன்றும் இணைக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.