தியத்தலாவ விபத்து தொடர்பில் இரு சாரதிகள் கைது!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
தியத்தலாவ ஃபாக்ஸ் ஹில் மோட்டார் பந்தயத்தின் போது 7 பேரை பலிகொண்ட விபத்து தொடர்பில் இரு கார் சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விபத்தில் படுகாயம் அடைந்த இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் குறித்த விபத்தில் படுகாயமடைந்த 21 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.