கிளிநொச்சியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
#SriLanka
#Kilinochchi
Mayoorikka
1 year ago

கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இராமநாதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குறித்த பகுதியில் உள்ள கிராமசேவையாளர் அலுவலக வளாகத்திலேயே இவ்வாறு சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். குறித்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த கணகரத்தினம் ரவிச்சந்திரன் 34 வயதுடைய மூன்று பிள்ளைகள் தந்தையே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த மரணம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.



