சமூக ஊடகத்தில் பாராளுமன்ற உறுப்பினரை விமர்சித்த பெண்ணை விசாரணைக்கு அழைப்பு!
#SriLanka
#Social Media
Mayoorikka
1 year ago

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை விமர்சித்து சமூக ஊடகங்களில் வெளியான பதிவு தொடர்பில் பெண் ஒருவர் பாராளுமன்ற சிறப்புரிமைகள் குழுவுக்கு அழைக்கப்படவுள்ளார்.
இலங்கையில் முதன்முறையாக இவ்வாறான நிகழ்வு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. களுத்துறையைச் சேர்ந்த லலந்தி பெரேரா என்ற பெண்ணே இவ்வாறு அழைக்கப்படவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, இன்று (01) அறிவித்துள்ளார்.
குறித்த பெண், பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன மற்றும் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோர் தொடர்பில் கருத்து பதிவிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.



