கொஸ்கொட பகுதியில் சட்டவிரோத மின்வேலியால் நான்கு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
கொஸ்கொட பிரதேசத்தில் வயல்வெளியொன்றில் சட்டவிரோதமாக போடப்பட்ட மின்வேலியில் சிக்குண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பன்றிகளை வேட்டையாட போடப்பட்ட மின்வேலியில் சிக்குண்டே அவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொஸ்கொட பஸ்ஸமன்ஹந்திய பிரதேசத்தில் வசிக்கும் நான்கு பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் இலவங்கப்பட்டை நசுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் குறித்த விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
இதனிடையே, அனுமதியின்றி அறுந்து கிடக்கும் மின்கம்பிகளால், உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக, அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.