நன்கொடை பொருட்களை விற்று போதைப்பொருள் வாங்கிய தேரர் கைது
#SriLanka
#Arrest
#drugs
#Monk
#kurunagala
#lanka4Media
#lanka4.com
Prasu
1 year ago
குருணாகல் பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றிற்கு நன்கொடையாக வழங்கப்பட்ட சலவை இயந்திரத்தை விற்பனை செய்து போதைப்பொருள் பயன்படுத்திய விகாரையின் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
இரு வாரங்களுக்கு முன்னர் குருணாகல் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது சந்தேக நபர் ஐஸ் போதைப்பொருயுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேரரின் வேண்டுகோளுக்கு அமைய வெளிநாட்டில் உள்ள விகாரையின் பங்காளர் ஒருவர் 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான சலவை இயந்திரம் ஒன்றை நன்கொடையாக வழங்கியுள்மை குறிப்பிடத்தக்கது.