ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் விசேட மாநாடு இன்று: வெளியாகவுள்ள முக்கிய அறிவிப்பு
#SriLanka
#Mahinda Rajapaksa
#Meeting
#SLPP
Mayoorikka
2 years ago
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் விசேட தேசிய மாநாடு இன்று (15) பிற்பகல் நடைபெறவுள்ளது.
சுகததாச உள்விளையாட்டு மைதானத்தில் இது நடைபெறவுள்ளது. கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகப் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை இன்றைய தேசியமாநாட்டில் மஹிந்த ராஜபக்ச முக்கிய செய்தியை நாட்டு மக்களுக்கு வழங்குவார் என்றும் கூறப்படுகின்றது.