அரிசி விலை தொடர்பில் வெளியான தகவல்!
#SriLanka
#rice
#prices
Mayoorikka
2 years ago
அரிசி வியாபாரிகள் சம்பா அரிசியின் விலையை 30 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இலங்கையில் உள்ள பிரதான அரிசி நிறுவனம் ஒன்று சம்பா அரிசியின் விலையை கிலோ கிராம் ஒன்றுக்கு 230 ரூபாவிலிருந்து 260 ரூபாவாகவும் மற்றுமொரு நிறுவனம் சம்பா அரிசியின் விலையை 245 ரூபாவாகவும் உயர்த்தியுள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
இந்த நிறுவனங்களுக்கு இஷ்டம்போல் விலையை அதிகரிக்க சந்தர்ப்பம் வழங்கினால், பண்டிகைக் காலம் முடிவடைவதற்குள் ஒரு கிலோ கிராம் சம்பா அரிசியின் விலை 300 ரூபாவை நெருங்கும் என நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.