புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பியோடிய 50 கைதிகள்!
#SriLanka
#Arrest
#Police
#Prison
Mayoorikka
2 years ago
வெலிகந்த கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்து 50 கைதிகள் தப்பிச் சென்றுள்ள நிலையில், அவர்களில் 21 கைதிகள் மீண்டும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏனையோரை கைதுசெய்ய சிறப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்து கைதிகள் சிலர் நேற்றையதினம் தப்பிச்சென்றதாக தெரிவிக்கப்பட்டது.
இதன்படி, சுமார் 50 கைதிகள் இவ்வாறு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்து பல்வேறு சந்தர்ப்பங்களின் போது கைதிகள் இவ்வாறு தப்பியோடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.