மத இழிவுபடுத்தல் - ஞானசார தேரருக்கு எதிரான வழக்குத் தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!
#SriLanka
#Arrest
#Police
#Gnanasara Thero
#Court
PriyaRam
1 year ago

கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டு கொழும்பில் இடமபெற்ற இந்த ஊடக சந்திப்பின் போது, இஸ்லாத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் கைது செய்யப்பட்டார்.
அவ்வாறான நிலையில், விசாரணைகளையடுத்து ஞானசார தேரர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையிலேயே குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.



