வேலைநிறுத்தத்தால் ஊதியத்தை உயர்த்துவதில் சிக்கல் ஏற்படும்!

#SriLanka #strike #government #Salary
Mayoorikka
2 years ago
வேலைநிறுத்தத்தால் ஊதியத்தை உயர்த்துவதில் சிக்கல் ஏற்படும்!

வேலைநிறுத்தம் காரணமாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறையும் பட்சத்தில் அது அரசாங்க மற்றும் தனியார் துறைகளில் உத்தேச சம்பள அதிகரிப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

 சுற்றுலாத் துறை மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்தங்கள் மூலம் வழங்கும் வரிப்பணத்தை அழிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றோம் என்றும் அபேவர்தன தெரிவித்தார்.

 அரச மற்றும் தனியார் துறைகளில் சம்பளத்தை அதிகரிப்பதன் மூலம் முழு மக்களுக்கும் நிவாரணம் வழங்க ஜனாதிபதி செயற்படுவார் எனவும் அபேவர்தன தெரிவித்தார்.

 அரசு ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதில், தனியார் துறை ஊழியர்கள் சம்பாதிக்கும் பணத்திலும், சுற்றுலாத் தொழிலில் ஈடுபடுபவர்கள் கொடுக்கும் வரிப்பணத்திலும் சம்பளம் வழங்கப்படும் என்று  அபேவர்தன கூறினார்.

 வேலைநிறுத்தம் ஏற்படும் போது சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவதோடு ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கு இடையூறாக அமையும் எனவும் அபேவர்தன தெரிவித்தார்.

 இரத்தினபுரி மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் இளைஞர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அபேவர்தன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!