இலங்கையில் இனம்காணப்பட்ட புதிய வகை நுளம்பு! மனிதனுக்கு ஆபத்தா?
#SriLanka
#sri lanka tamil news
#Animal
Mayoorikka
2 years ago
இலங்கையில் தவளைகளின் இரத்தத்தை மட்டும் உறிஞ்சும் புதிய வகை நுளம்பு இனம் ஒன்று இனங்காணப்பட்டுள்ளதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மீரிகம, ஹந்துருமுல்ல பிரதேசத்தில் இந்த நுளம்பு இனம் காணப்படுவதாக பூச்சியியல் திணைக்களத்தின் பூச்சியியல் அதிகாரி கயான் ஸ்ரீ குமாரசிங்க தெரிவித்தார்.

இலங்கையில் இனங்காணப்பட்டுள்ள நுளம்பு இனங்களின் எண்ணிக்கை 156 ஆக அதிகரிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே இந்த வகை நுளம்பு 108 வருடங்களுக்கு முன்னர் தென்கொரியாவில் அடையாளம் காணப்பட்டதுடன் தொடர்ந்து தாய்லாந்திலும் அடையாளம் காணப்பட்ட நிலையில் தற்போது இலங்கையில் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.