வவுனியாவில் அறநெறி மாணவர்களின் கலை கலாச்சார நிகழ்வு!

வவுனியா நெடுங்கேணி பிரதேச செலகப் பிரிவின் புளியங்குளம் பரசங்குளம் நாகாகபூசணி அம்மன் அறநெறி மாணவர்களின் கலை கலாச்சார நிகழ்வு நேற்று (22.10) இடம்பெற்றது.
பாடசாலை மற்றும் நாகபுசணி ஆலய நிர்வாத்தினர் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வானது ஆலய குருக்களின் பூஜை வழிபாட்டுடனும், ஆசியுரையுடனனும், வரவேற்ப்பு நடனத்திற்கு பின் ஆரம்பமாகியது.
இந்நிகழ்வில் ஆசிரியர்கள். மாணவர்கள் என பலர் இணைந்து நடத்திய இந்த நிகழ்வில் பசுமை திட்டம் Ivk ஆலய நிர்வாகத்தினர் அறநெறி பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் திருவாளர் அஸ்வின், லண்டன் கலாநிதி இறைதந்தை லிங்க ஜோதி, லண்டன் முகுந்தன் லண்டன் லக்சுமி நாராயணன், லண்டன் ஆகியோர் இந் நிகழ்விற்கு அனுசரணை வழங்கி இருந்தனர்.
இந் நிகழ்வில் அப்துல்கலாம் அறக்கட்டளையினர் வவுனியா மன்னார் மாவட்ட உலக சைவத்தமிழ் பேரவை தலைவர்கள் கலாசார உத்தியோகத்தர் சைவ சமய ஆர்வலர்கள் அக்கிராம சைவ மக்கள் மாணவர்கள் கிராம அலுவலர் மற்றும் பலரும் கலந்து சிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



