நீண்டகால தாமதத்தின் பின் பிரித்தானியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் தெரிவு!
#SriLanka
#Embassy
#Britain
#England
Mayoorikka
1 year ago

பிரித்தானியாவிற்கான இலங்கையின் அடுத்த உயர்ஸ்தானிகராக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவரை ஏற்றுக்கொள்வதில் பிரித்தானிய அரசாங்கம், நீண்டகால தாமதத்தை ஏற்படுத்திய நிலையிலேயே தற்போது அதற்கான ஒப்புதல், கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த அமைச்சராக இருந்த அவர், சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் நிர்வாகங்களில் கிழக்கு மாகாண ஆளுநராக பணியாற்றினார்.
இந்தநிலையில், பிரித்தானிய உயர்ஸ்தானிகராக அவர் எதிர்வரும் நவம்பர் மாதம் நடுப்பகுதியில் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.



