தனியார் மருந்தகங்களில் மருந்து தட்டுப்பாடு இல்லை

#SriLanka #Lanka4
Prabha Praneetha
2 years ago
தனியார் மருந்தகங்களில் மருந்து தட்டுப்பாடு இல்லை

அரச வைத்தியசாலைகளில் மருந்துத் தட்டுப்பாடு நிலவுகின்ற போதிலும், தற்போது போதியளவு மருந்துகள் கையிருப்பில் உள்ளதால் தனியார் மருந்தகங்கள் தட்டுப்பாட்டினால் பாதிக்கப்படவில்லை என அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர் சங்கம் மற்றும் இலங்கை மருந்தக சங்கம் தெரிவித்துள்ளது.

 அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் (ACPPOA) தலைவர் சந்திக கங்கந்த, அரசாங்க வைத்தியசாலைகள் கடுமையான மருந்துப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளதை அவர்கள் நன்கு அறிந்திருந்தாலும், தனியார் மருந்தகங்களில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை.

அரசு மருத்துவமனைகள் வழங்கும் மருந்துச் சீட்டுகளுடன் தனியார் மருந்தகங்களில் இருந்து மருந்துகளை நாடி நோயாளிகள் வருவதை நாங்கள் அவதானித்துள்ளோம்.

என்றார். மேலும், மருந்துகளின் விலைகள் 10-15% குறைக்கப்படும் என சுகாதார அமைச்சர் தெரிவித்திருந்த போதிலும் மருந்துகளின் விலைகள் 30 வீதத்தால் குறைக்கப்படலாம் என கங்கந்த தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!