பாராளுமன்றத்தின் புதிய செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர
#SriLanka
#Lanka4
#Tamilnews
Prabha Praneetha
2 years ago
பாராளுமன்ற செயலாளர் நாயகம் பதவிக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட குஷானி ரோஹணதீர இன்று காலை தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
புதிய பதவியில் தனது கடமைகளை பொறுப்பேற்பதற்காக இன்று காலை பாராளுமன்றத்துக்கு வருகை தந்த ரோஹணதீரவை பாராளுமன்ற உதவிச் செயலாளர்களான டிக்கிரி கே.ஜயதிலக மற்றும் ஹங்ச அபேரத்ன ஆகியோர் வரவேற்றனர்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் புதிய செயலாளர் நாயகம் பதவிச் சத்தியம் செய்துகொண்டதுடன், மகா சங்கத்தினர் ஆசீர்வதித்து மத அனுஷ்டானங்களை மேற்கொண்டனர்.