மோசமான வானிலை காரணமாக அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் வாகன சாரதிகளுக்கான வேண்டுகோள்
#SriLanka
Prabha Praneetha
2 years ago
இலங்கையில் நிலவும் பாதகமான காலநிலை காரணமாக, அதிவேக நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் வாகன சாரதிகளுக்கு, வாகனத்தின் வேகத்தை மணிக்கு 60 கிலோமீற்றராக மட்டுப்படுத்துமாறு அதிவேக வீதி போக்குவரத்து பொலிஸ் பிரிவு அறிவித்துள்ளது.
இதற்கிடையில், குறைந்த வெளிச்சம் காரணமாக வாகனங்களை ஓட்டும் போது வாகனங்களுக்கு இடையில் சரியான தூரத்தை வைத்திருக்குமாறும், அவர்கள் இலக்கை அடையும் வரை முன் மற்றும் பின் விளக்குகளை எரிய வைக்குமாறும் பொலிஸார் சாரதிகளுக்கு அறிவில்த்துள்ளனர் .