மருத்துவ ஆலோசனையின்றி NSAID வகை வலி நிவாரணிகளைப் பயன்படுத்துவதில் எச்சரிக்கை தேவை
டெங்கு தொடர்பான பல மரணங்கள் NSAID வகை வலி நிவாரணிகளைப் பயன்படுத்தியதால் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுவதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் கூறுகிறது.
அதிக காய்ச்சல் மற்றும் உடல் வலி மற்றும் தலைவலி போன்றவற்றிற்கான சிகிச்சையாக மக்கள் இந்த வகையான வலி நிவாரணிகளை பயன்படுத்துகின்றனர் என்று சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
வலியைக் குறைக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும், அதிக உடல் வெப்பநிலையைக் குறைக்கவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஸ்டெராய்டல் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகளை (NSAID) மருத்துவரின் முறையான மருத்துவ ஆலோசனையின்றி பயன்படுத்துவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மேலும், Ibuprofen, Mefenamic acid, Indomethacin, Naproxen, Celecoxib மற்றும் Aspirin போன்ற பல வர்த்தக நாமங்களில் உற்பத்தி செய்யப்படும் வலி நிவாரணி மருந்துகள் இலங்கையில் பரவலாகப் பயன்படுத்தப்படுவதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இத்தகைய மருந்துகள் நல்ல வலி நிவாரணிகளாக இருந்தாலும், டெங்கு நோய்த்தொற்றுக்கு அவற்றைப் பயன்படுத்துவதால் சிக்கல்கள் மற்றும் மரணம் கூட ஏற்படலாம் என்று சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
மேலும் , இந்த நாட்களில் யாருக்காவது காய்ச்சல் இருந்தால், அவர்கள் நன்றாக ஓய்வெடுக்க வேண்டும் மற்றும் ஏராளமான திரவங்களை உட்கொள்ள வேண்டும் என்று சுகாதார மேம்பாட்டு பணியகம் சுட்டிக்காட்டுகிறது, மேலும் சரியான மருந்தான Paracetamol ஐ மட்டுமே பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .