சீனாவால் தாமதமாகும் சர்வதேச நாணய நிதியத்தின் உதவி! நீதியமைச்சர் விஜயதாஸ
#SriLanka
#Sri Lanka President
#IMF
#China
#money
#sri lanka tamil news
#Lanka4
Mayoorikka
2 years ago

நாட்டின் பொருளாதாரம் குறித்து சர்வதேச சமூகத்துக்கு நம்பிக்கை ஏற்படுவதற்கு இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவி அவசியம் என நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சீனாவிடமிருந்து சாதகமான பதில் கிடைப்பது தாமதமாவதால் சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவியை பெற்றுக் கொள்வதில் தடைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
.சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை இலங்கை நாடவேண்டும் என 2021லேயே யோசனைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
ஆனால், அந்தச்சமயம் மத்திய வங்கியின் ஆளுநராக பணியாற்றியவர் அதனை ஏற்க மறுத்ததால் அது தாமதமானது என அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.



