முக்கியமான கட்டத்தில் இலங்கை; ஒவ்வொருவரின் குரலும் முக்கியம் அமெரிக்கத் தூதர் 'டீவீட் '
Prasu
2 years ago
"இலங்கை தனது வரலாற்றில் ஒரு முக்கியமான கட்டத்தில் நிற்கும் இந்தத் தருணத்தில், ஒவ்வொருவரினதும் குரலும் முக்கியமானகும்."
- இவ்வாறு இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.
இதனை தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள அவர்,
"எதிர்ப்பாளர்கள் அமைதியுடன் செயற்பட வேண்டும். அவர்களின் குரல்கள் மற்றும் ஒற்றுமையைப் பயன்படுத்தி மாற்றத்துக்காக எடுக்கப்படும் முயற்சிகளை நான் வரவேற்கின்றேன்.
இதற்கான தீர்வை விரைவாகக் கண்டறிந்து நடைமுறைப்படுத்தி, இலங்கை மக்களின் மனதை வெல்லுமாறு அரசைக் கோருகிறேன்" - என்று மேலும் குறிப்பிட்டுள்ளார்.