உக்ரைன் மீது ரஷிய படைகள் தாக்குதல்: சுவீடன் பிரஜைகள் உக்ரைன் கொடிகளை நாட்டி ஆதரவு
Mayoorikka
3 years ago

உக்ரைன் மீது ரஷிய படைகள் பயங்கர தாக்குதலை நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி தாக்குதலை நடத்தி வரும் நிலையில் உக்ரைன் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் உக்ரைன் மீது தாக்குதலைத் தொடங்கிய ரஷ்யாவுக்கு உலக நாடுகள், குறிப்பாக மேற்கத்திய நாடுகள் தங்களின் கண்டனங்களை பதிவு செய்துவரும் சூழலில் சுவீடனில் வாழும் பிரஜைகள் உக்ரைன் மக்களுக்கு ஆதரவாக தங்கள் வீடுகளுக்கு முன்பாக உக்ரைன் நாட்டு கொடிகளை நாட்டி தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.




