பிள்ளையாரை இந்த 21 இலைகளைக்கொண்டு வணங்கினால் அனைத்துத் தெய்வங்களின் பலனும் கிடைக்கும் அது எந்த இலைகள்? விபரம் உள்ளே

Prasu
2 years ago
பிள்ளையாரை இந்த 21 இலைகளைக்கொண்டு வணங்கினால் அனைத்துத் தெய்வங்களின் பலனும் கிடைக்கும் அது எந்த இலைகள்? விபரம் உள்ளே

பிளையாருக்கு இருபத்தொரு வகையான இலைகளைக் கொண்டு அர்ச்சனை செய்வது மிகச் சிறப்பான ஒரு விஷயம் என முன்னோர்கள் சொல்ல்லியிருக்கஇறார்கள். 

இப்படி இருபத்தொரு வகையான இந்த இலைகளை கொண்டு விநாயகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்யும் பொழுது பல நன்மைகள் நம்மை வந்து சேரும். அப்படி எந்தெந்த இலைகளைக் கொண்டு அர்ச்சனை செய்தால் என்னென்ன பலன்கள் நம்மை வந்து சேரும் என்பதை பற்றி பார்ப்போம்.

1. விநாயக பெருமானுக்கு முல்லை இலை கொண்டு அர்ச்சனை செய்தால் மிக அதிக அளவிலான அறம் வளரும்.

2. விநாயக பெருமானுக்கு கரிசலாங்கண்ணி இலையை கொண்டு அர்ச்சனை செய்தால் இல் வாழ்க்கைக்கு தேவையான பொருள் சேரும்.

3. விநாயகப் பெருமானுக்கு விஸ்வம் இலை கொண்டு அர்ச்சனை செய்தால் இன்பம் மற்றும் நீங்கள் விரும்பியவை அனைத்தும் கிடைக்கும்.

4. விநாயகப்பெருமானுக்கு அருகம்புல் கொண்டு அர்ச்சனை செய்தால் உங்களுக்கு எல்லா விதமான சௌபாக்கியங்களும் கிடைக்கும்.

5. விநாயக பெருமானுக்கு இலந்தை இலை கொண்டு அர்ச்சனை செய்தால் நீங்கள் உங்கள் கல்வியில் மிகப்பெரிய மேன்மையை அடையலாம்.

6.விநாயக பெருமானுக்கு ஊமத்தை இலை கொண்டு அர்ச்சனை செய்தால் பெருந்தன்மை கைவரப்பெறும்.

7. விநாயக பெருமானுக்கு வன்னி இலை கொண்டு அர்ச்சனை செய்தால் இந்த பூலோக வாழ்க்கையிலும் சொர்க்க வாழ்க்கையிலும் நன்மைகள் அதிகம் கிடைக்கப்பெறும்.

8. விநாயக பெருமானுக்கு நாயுருவி கொண்டு அர்ச்சனை செய்தால் முகப்பொலிவும் அழகும் கூடும்

9. விநாயக பெருமானுக்கு கண்டங்கத்திரி கொண்டு அர்ச்சனை செய்தால் வீரமும், தைரியமும் அதிகம் உங்களுக்கு கிடைக்கும்

10. விநாயக பெருமானுக்கு அரளி இலை கொண்டு அர்ச்சனை செய்தால் நீங்கள் எடுக்கக் கூடிய எல்லா முயற்சியிலும் மிகப்பெரிய வெற்றி கிடைக்கும்.

11. விநாயக பெருமானுக்கு எருக்கம் இலை கொண்டு அர்ச்சனை செய்தால் கருவிலுள்ள சிசுவுக்கு நல்ல பாதுகாப்பு கிடைக்கும்.

12. விநாயக பெருமானுக்கு மருதம் இலை கொண்டு அர்ச்சனை செய்தால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு மகப்பேறு கிடைக்கும்.

13. விநாயக பெருமானுக்கு விஷ்ணுகிரந்தி இலை கொண்டு அர்ச்சனை செய்தால் முனிவு கைவரப்பெறும்.

14. விநாயகப் பெருமானுக்கு மாதுளை இலை கொண்டு அர்ச்சனை செய்தால் உங்களுக்கு நல்ல பெயரும், புகழும் அதிகம் கிடைக்கும்.

15. விநாயக பெருமானுக்கு தேவதாரு இலை கொண்டு அர்ச்சனை செய்தால் உங்களுக்கு எதையும் தாங்கும் மனோ தைரியம் கிடைக்கும்.

16. விநாயக பெருமானுக்கு மருக்கொழுந்து இலை கொண்டு அர்ச்சனை செய்தால் உங்களுக்கு இல்லற சுகம் கிடைக்கப்பெறும்.

17. விநாயக பெருமானுக்கு அரசம் இலை கொண்டு அர்ச்சனை செய்தால் உங்களுக்கு உயர்பதவியும், பதவியால் கீர்த்தியும் அதிகம் கிடைக்கும்.

18. விநாயக பெருமானுக்கு ஜாதிமல்லி இலை கொண்டு அர்ச்சனை செய்தால் சொந்த வீடு, மனை, பூமி பாக்கியம் கிடைக்கப்பெறும்.

19. விநாயக பெருமானுக்கு தாழம் இலை கொண்டு அர்ச்சனை செய்தால் செல்வச் செழிப்பு கிடைக்கும்.

20. விநாயக பெருமானுக்கு அகத்தி இலை கொண்டு அர்ச்சனை செய்தால் கடன் தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும்.

21. விநாயக பெருமானுக்கு தவனம் ஜகர்ப்பூரஸ இலை கொண்டு அர்ச்சனை செய்தால் நல்ல கணவன், மனைவி அமையப் பெறுவார்கள்.

 

இந்த இருபத்தொரு  வகையான இலைகளைக்கொண்டு விநாயக பெருமானுக்கு செய்யக்கூடிய அர்ச்சனை உங்களுடைய வாழ்க்கையை எல்லாவிதத்திலும் மேம்படுத்தும் என்பது ஐதீகம்.

ஆம்...

பிளையாரே எக்கோவில்களிலும் முதன்மை தெய்வமாக இருப்பவர்.

எனவே இப்பரிகாரத்தை செய்வதனால் அனைத்து தெய்வங்களின் அனுக்கிரகமும் ஆசீர்வாதமும் கிடைக்க நாமும் பிள்ளையாரை வணங்குவோம்.

                                                 ஓம் நமோ கணபதியே நமக.