வட கொரியாவில் பரபரப்பை ஏற்படுத்திய 14 வயது சிறுவனின் சிறைத்தண்டனை!!
#world_news
Nila
3 years ago

வட கொரியாவில் தடை செய்யப்பட்ட தென்கொரிய மொழிப் படத்தை பார்த்த 14 வயதுடைய மாணவனுக்கு வடகொரிய நீதிமன்றம் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
உலகின் மர்ம தேசமாக விளங்கும் வட கொரியாவில் கடுமையான சட்டங்கள் நடைமுறையில் உள்ளது. சமூக ஊடகங்கள் எவையும் பாவனையில் இல்லை என்பதுடன் அரச ஊடகங்களைத் தவிர தனியார் ஊடகங்கள் இயங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் ஸ்குவிட் கேம் (Squid Game) வெப் சீரிசை பரப்பியவருக்கு மரண தண்டனையும் அதனைப் பார்த்தவர்களுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



