சாதாரண தரப் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீடு! விண்ணப்பங்கள் நாளையுடன் நிறைவு
#SriLanka
#Examination
Mayoorikka
23 hours ago
2025 (2026) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களாகப் பணியாற்றுவதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை நாளை (08) ஆம் திகதியுடன் நிறைவடைவதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் https://onlineexams.gov.lk/eic என்ற இணையதளத்தின் ஊடாக தொடர்ந்தும் விண்ணப்பிக்க முடியும்.
2025 (2026) சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரும் நடவடிக்கைகள் கடந்த மாதம் (25) ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
“இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்”