கொழும்பு துறைமுகத்தில் கச்சா எண்ணெய் கசிவு : 200 மெட்ரிக் டன் கடலுடன் கலப்பு!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
21 hours ago
கொழும்பு துறைமுகத்தில் அமைந்துள்ள கச்சா எண்ணெய் இறக்கும் மிதவையில் நேற்று (14) அதிகாலை ஏற்பட்ட வெடிப்பால் ஏற்பட்ட கசிவு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் தொடர்ந்த இந்த கசிவின் விளைவாக, சுமார் 200 மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் கடல் நீரில் கலந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் (MEPA), இலங்கை கடலோர காவல்படை (SLCG) மற்றும் இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படையின் உதவியுடன், கடல் நீரில் கலந்த கச்சா எண்ணெயை அகற்றி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
