தனக்கு இருக்கும் பிரச்சனையை வெளிப்படையாக தெரிவித்த நடிகை கயாடு லோஹர்
#Actress
#TamilCinema
#Tamil
#Movie
Prasu
1 hour ago
டிராகன்’ படத்தில் தமிழ் சினிமாவில் முதல் முறையாக அறிமுகமான கயாடு லோஹர் தற்போது நடிகர் அதர்வாவிற்கு ஜோடியாக ‘இதயம் முரளி’ படத்திலும் ஜீ.வி. பிரகாசுடன் ‘இம்மார்டல்’ என்ற படத்திலும் சிம்பு நடிக்கும் ‘எஸ்.டி.ஆர் 49’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவரிடம், “உங்களிடம் மாற்றிக்கொள்ள நினைக்கும் விஷயம் எது?" என்று கேட்கப்பட்டது.
அதற்கு "நான் மிகவும் உணர்ச்சிவசப்படும் ஆள்.அதுதான் என் பிரச்சினையாகவே நினைக்கிறேன். அதனால் எளிதில் மனம் உடைகிறேன்.
எனவே அந்த போக்கை மாற்றிக்கொண்டு இன்னும் உறுதி மிக்கவளாய், எந்த சூழலிலும் தடுமாற்றம் இல்லாதவளாய் மாற ஆசைப்படுகிறேன்” என்று அவர் பதிலளித்தார்.
(வீடியோ இங்கே )