ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முன்னெடுத்த நிவாரணப் பணிகள் நிறைவு!
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முன்னெடுத்த நிவாரணப் பணிகள் இன்று நிறைவடைந்துள்ளது.
ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானின் உத்தரவின் பேரில், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் துன்பத்தைத் தணிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, உணவுப் பொருட்கள் மற்றும் தங்குமிடப் பொருட்கள், கூடாரங்கள் மற்றும் நிவாரணப் பெட்டிகள் உட்பட மொத்தம் 116 டன் அவசர மனிதாபிமான உதவிகளை ஐக்கிய அரபு எமிரேட்ஸின் நிவாரணக் குழுக்கள் வழங்கின.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தேடல் மற்றும் மீட்புக் குழு சிறப்பு கள நடவடிக்கைகளை மேற்கொண்டது, இதன் போது காணாமல் போனவர்களின் 20 உடல்கள் மீட்கப்பட்டன, சிறிய காயங்களுடன் எட்டு பேருக்கு முதலுதவி அளித்திருந்தனர்.
மனிதாபிமான நடவடிக்கை ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உறுதியாக வேரூன்றிய அணுகுமுறையைக் குறிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
