03 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை - உடனடியாக வெளியேறுமாறு உத்தரவு!

#SriLanka #Warning #landslide #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 hours ago
03 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை - உடனடியாக வெளியேறுமாறு உத்தரவு!

கண்டி, கேகாலை, குருநாகல் மற்றும் மாத்தளை மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுமாறு பேரிடர் மேலாண்மை மையம் (DMC), மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

தற்போது நிலவும் பாதகமான வானிலை காரணமாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. 

images/content-image/1765254783.jpg

இதற்கமைய  கண்டி மாவட்டம்: ஹதரலியத்த, யட்டிநுவர, உடதும்பர, பாதஹேவாஹெட்ட, மெடதும்பர, பஸ்பகே கோரளே, தெல்தோட்டை, பூஜாபிட்டிய, கங்கா இஹல கோரளை, பன்வில, கங்காவட கோரளை, உடபலத, ஹரிஸ்பத்துவ, குண்டசாலை, மினிபே, ஹரிஸ்பத்துவ, குண்டசாலை, மினிபே, ஊ டோலுவௌர், தும்பராணேடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

கேகாலை மாவட்டம்: கேகாலை, கலிகமுவ, மாவனெல்ல, புலத்கொஹுபிட்டிய, அரநாயக்க, யட்டியந்தோட்டை, ரம்புக்கன, வரகாபொல மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள். 

 குருநாகல் மாவட்டம்: மாவத்தகம, மல்லவபிடிய, ரிதீகம மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள். மாத்தளை மாவட்டம்: நாவுல, வில்கமுவ, பல்லேபொல, அம்பன்கங்கா கோரளை, லக்கல பல்லேகம, உக்குவெல, ரத்தோட்டை, மாத்தளை, யடவத்த மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


லங்கா4 (Lanka4)


(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg



 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை