அவசர வானிலை அறிவித்தல்; புயல் உருவாக்கம்; கன மழை மற்றும் வெள்ள அனர்த்த எச்சரிக்கை
#SriLanka
Mayoorikka
1 hour ago
27.11.2025 வியாழக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜாவினால் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்.
இலங்கையின் தென்கிழக்கே, பாணமவுக்கு அருகில் உள்ள கடற்பகுதியில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 06 மணித்தியாலத்தில் புயலாக வலுப்பெறும் வாய்ப்புள்ளது.
நாட்டின் பல பகுதிகளிலும் கன மழை கிடைத்து வருகின்றன. நாடு முழுவதும் வெள்ள நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன.
பல இடங்களில் நிலச்சரிவு நிகழ்வுகளும் அதன் மூலமான இறப்புக்களும் பதிவாகியுள்ளன. ஆகவே நாட்டு மக்கள் அனைவரும் அவதானத்தோடும் முன்னெச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்.
- -நாகமுத்து பிரதீபராஜா -
(வீடியோ இங்கே )
அனுசரணை
