தமிழகத்தில் தலைமறைவாக இருந்த மூன்று இலங்கை தமிழர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்!
இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட மூன்று தமிழர்கள், பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று (29.10) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சந்தேக நபர்கள் நேற்று இந்தியாவிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மூவரும் 15 நாட்களுக்கு முன்பு படகு மூலம் பயணித்து தமிழகத்திற்கு சென்றுள்ளனர். அங்கு சென்னையில் தங்கியிருந்துள்ளனர்.
அவர்களிடம் பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகயில் ஆவணங்கள் இன்றி தங்கியிருப்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் மூவரும் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் வல்வெட்டித்துறை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட குண்டு சம்பவத்தில் இந்த மூன்று சந்தேக நபர்களும் தொடர்புடையவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழியில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டு கிடங்கு விடுதலைப் புலிகள் அமைப்பால் மறைத்து வைக்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
