பொலித்தீன் பைகளுக்கு பணம் செலுத்த வேண்டும்: நவம்பர் 1 முதல் அமுலில்
#SriLanka
#Lanka4
#bag
Mayoorikka
3 hours ago

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பொலித்தீன் பைகளை குறைப்பதை நோக்கமாகக் கொண்டு புதிய விதிமுறைகளின் ஒரு பகுதியாக, நவம்பர் 1 முதல் வர்த்தக நிலையங்களில் பொருட்களை வாங்கும் போது அதற்காக பெற்றுக் கொள்ளும் பைகளுக்கு பணம் செலுத்த வேண்டும்.
புதிய விதிமுறைகளின் கீழ், பொலித்தீன் பை என குறிப்பிடப்படும் பொலித்தீன் பைகள் இனி இலவசமாக வழங்கப்படாது.
அதன்படி, சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து பொருட்களை வாங்கும் போது வழங்கப்படும் ஒவ்வொரு பைகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்படும்.
பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பொருட்களால் சூழல் மாசடைதலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான தேசிய முயற்சிக்கு பங்களிக்கவும், மீண்டும் பயன்படுத்தக்கூடிய பைகள் மற்றும் கொள்கலன்களைப் பயன்படுத்துமாறு அதிகார சபை நுகர்வோரை வலியுறுத்துகின்றது.
(வீடியோ இங்கே )
அனுசரணை



