இஷாரா செவ்வந்தி தொடர்பான விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு!

பாதாள உலகக் கும்பல் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேக நபராக அடையாளம் காணப்பட்ட இஷாரா செவ்வந்தி மீதான விசாரணைகள் தொடர்பான அறிக்கையை கொழும்பு குற்றப்பிரிவு இன்று (22) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.
இஷாரா செவ்வந்தி தற்போது காவலில் வைக்கப்பட்டு தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரிக்கப்படுகிறார்.
விசாரணைகள் இன்னும் நடைபெற்று வருவதாலும் இன்னும் முழுமையடையாததாலும், சந்தேக நபரை விசாரிக்க பாதுகாப்பு அமைச்சிலிருந்து 90 நாள் தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணைகளின் முன்னேற்றம் உடனடியாக அறிவிக்கப்படும் என்று பொலிஸார் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளனர்.
வழங்கப்பட்ட தகவல்களைக் கருத்தில் கொண்ட நீதவான், விசாரணையின் முன்னேற்றத்தை தொடர்ந்து தெரிவிக்குமாறு பொலிஸாருக்கு அறிவுத்தியுள்ளார்.
சந்தேக நபரின் கண்காணிப்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் கையாளப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
மேலும், தற்போது 90 நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ள மேலும் இரண்டு சந்தேக நபர்கள் இஷாரா செவ்வந்திக்கு உதவியதாகவும், ஆதரித்ததாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுக்காக விசாரிக்கப்படுவதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் இந்த இரண்டு நபர்களும் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டுள்ளார்களா என்று நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்த பொலிஸார், கொலையில் அவர்கள் சந்தேக நபர்களாக பெயரிடப்படவில்லை என்றும், ஆனால் செவ்வந்திக்கு அவர்கள் அளித்த ஆதரவு மற்றும் போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளில் அவர்களின் ஈடுபாடு குறித்து விசாரிக்கப்படுவதாகவும் தெளிவுபடுத்தினர்.
தற்போதைய வழக்கு கோப்பின் கீழ் அந்த இரண்டு நபர்களைப் பற்றியும் உத்தரவுகளை பிறப்பிக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று நீதிபதி சுட்டிக்காட்டினார். அந்த நபர்கள் தொடர்பான உண்மைகளை முன்வைக்க தனி பி-அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அவர் பொலிஸாருக்கு அறிவுறுத்தினார்.
அத்தகைய முறையான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டவுடன், நீதிமன்றம் தொடர்புடைய உத்தரவுகளை பிறப்பிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று நீதிபதி மேலும் குறிப்பிட்டார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை



