தெற்காசிய நாடுகளுக்கான பணப்பரிவர்த்தனையை இந்திய ரூபாயில் மேற்கொள்ள தீர்மானம்!

#India #SriLanka #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
8 months ago
தெற்காசிய நாடுகளுக்கான பணப்பரிவர்த்தனையை இந்திய ரூபாயில் மேற்கொள்ள தீர்மானம்!

இலங்கை, நேபாளம் மற்றும் பூட்டான் உள்ளிட்ட தெற்காசிய பிராந்திய நாடுகளுடனான வர்த்தக பரிவர்த்தனைகளில் இந்திய ரூபாயைப் பயன்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி (RBI) முடிவு செய்துள்ளது. 

பிராந்திய வர்த்தகத்தில் அமெரிக்க டாலரைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும் என்று RBI தெரிவித்துள்ளது. 

 இந்திய ஊடக அறிக்கைகளின்படி, இலங்கை, நேபாளம் மற்றும் பூட்டானுடனான வர்த்தக பரிவர்த்தனைகளில் இந்தியா இந்திய ரூபாயை நேரடியாகப் பயன்படுத்த எதிர்பார்க்கிறது. 

images/content-image/1759376457.jpg

இந்த நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் இந்தியாவில் இருந்து அந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான பணம் இந்திய ரூபாயில் செய்யப்படும். 

இது இலங்கை போன்ற நாடுகளுக்கு டாலரைச் சார்ந்திருப்பதன் பொருளாதார தாக்கத்தைக் குறைக்க உதவும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4