ரயில் மோதி காலை இழந்த நபர்: வவுனியாவில் சோகம்
#SriLanka
#Vavuniya
#Lanka4
#Train
Mayoorikka
1 hour ago

ஓமந்தையில் ரயில் மோதி ஒருவர் கால் துண்டிக்கப்பட்ட நிலையில் படுகாயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்துச் சம்பவம் நேற்று இரவு 11.15 மணியளவில் வவுனியா -ஓமந்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு புறக்கோட்டை நோக்கி பயணித்த ரயில் மோதியதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு புறக்கோட்டை நோக்கி பயணித்த ரயில் வவுனியா - ஓமந்தைப் பகுதியில் பயணித்த வேளையிலேயே ஒருவர் மோதுண்டு படுகாயமடைந்துள்ளார்.
ரயில் மோதி படுகாயமடைந்த நபர் இடது கால் துண்டிக்கப்பட்ட நிலையில் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
(வீடியோ இங்கே )
அனுசரணை



